நாத்தாண்டிய, இஹல கொட்டராமுல்லை பிரதேசத்தில் நீர் நிரம்பிய குழி ஒன்றினுள் வீழ்ந்து நான்கு வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதுவருட
தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தனது பெற்றோருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கு சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது வாகனங்கள் சர்வீஸ் பண்ணப்படும் நிலையம் ஒன்றின் கழிவுகளை அகற்றும் குழி ஒன்றினுள் தவறுதலாக வீழ்ந்துள்ள போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேர பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாராவில பொலிசார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.








0 Comments:
Post a Comment