கடந்த வியாழக்கிழமை சிலாபம் தெதுரு ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த புத்தளம் பிரதேச சபைத் தலைவர் திலுக் சுசிர பத்திரகேயின் இறுதிக்கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அதிக எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்த பிரதேச சபைத் தலைவரின் உடலுக்கு கடந்த சனிக்கிழமை தனது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக மதுரங்குளி வந்திருந்தார்.நேற்றைய இந்த நிகழ்வையொட்டி மதுரங்குளி நகரில் சகல வர்த்தக நிலையங்களும் நண்பகலுடன் மூடப்பட்டன். பாலாவி மதுரங்குளி நகர் வெள்ளைக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. புத்தளம் சிலாபம் நகரிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் உயிரிழந்த பிரதேச சபைத் தலைவருக்கு அஞசலி செலுத்தும் பல்வேறு பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.











0 Comments:
Post a Comment