மாராவில முகுதுகட்டுவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளானதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்தில் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வத்தளையிலிருந்து
பிங்கிரிய நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து
இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்தின் போது மேலும் இருவர் காயங்களுக்குள்ளான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாராவில பொலிசார் மேற்கொண்டு
வருகின்றனர்.








0 Comments:
Post a Comment