பஸ்ஸில் பணித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒருவர் மஹபாகே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த ஒரவரே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டவராவார்.
இந்நபரின் இச்செய்கையினையடுத்து குறித்த பல்கலைக்கழக மாணவி இது பற்றி பஸ்ஸில் இருந்த ஏனைய பயணிகளுக்கு தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் மஹபாகே பொலிஸாரால் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த ஒரவரே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டவராவார்.
இந்நபரின் இச்செய்கையினையடுத்து குறித்த பல்கலைக்கழக மாணவி இது பற்றி பஸ்ஸில் இருந்த ஏனைய பயணிகளுக்கு தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் மஹபாகே பொலிஸாரால் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.









0 Comments:
Post a Comment