கற்பிட்டி, முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று
புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற கற்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மரணமானவர் இதுவரையிலும் அடையாளம் காணப்படாவில்லை எனக் குறிப்பிட்ட
கற்பிட்டி பொலிஸார், நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத
பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும்
குறிப்பிட்டனர்.குறித்த பிரதேசத்தில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற கற்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TM)
0 Comments:
Post a Comment