Comments

3/recent-comments

Sunday, September 1, 2013

கடல் அலையில் சிக்சி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

இரண்டரை வயது குழந்தை ஒன்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர்.   மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருசுப்பள்ளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த இக்குழந்தை தந்தையுடன் வீட்டின் பின்புறம் சென்றுள்ளது. பின்னர் இக் குழந்தை வீட்டின் பின்புறமாக உள்ள கடலிற்குச் சென்றுள்ள போது கடல் அலையில் சிக்சி கடலினுள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு  குழந்தை நீரில் மூழ்குவதை குழந்தையின்  பாட்டி கண்டு சப்திட்டதில் பிரதேசவாசிகள் அவ்விடம் வந்து கடலினுள் தேடியதில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளிவ். மார்க் சேபால் பெர்னாண்டோ எனும் இரண்டரை வயது ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த குழந்தையாகும்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மாரவில் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag