Comments

3/recent-comments

Sunday, September 1, 2013

புத்தளத்தில் இன்று ஐ.ம.சு.முன்னணியின் இரண்டாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று புத்தளத்தில் இடம்பெறவுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் இக்கூட்டம் புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெறும்.


புத்தளம் நகரபிதாவும், புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான கே. ஏ. பாயிஸ் தலைமையில் இடம்பெறவுளள இக்கூட்டத்தில் புத்தளம் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான சட்டத்தரணி ஏ. எம். கமறுதீன், ஏ.எச். எம். றியாஸ், எஸ். ஏ. எஹியா, என். டி. எம். தாஹிர் மற்றும் சிந்தக மாயாதுன்ன ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இக்கூட்டத்தின் போது புத்தளத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கப்பட வுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag