Comments

3/recent-comments
Showing posts with label புத்தளம் செய்திகள். Show all posts
Showing posts with label புத்தளம் செய்திகள். Show all posts

Sunday, May 19, 2013

ஐ.தே.கட்சி எம்.பி ஹரிசன் ஆனமடுவில் மாட்டு வண்டியில் சென்று அங்கத்தவர்கள் சேர்ப்பு. (படங்கள் இணைப்பு)


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆனமடு பிரதேசத்தில் மாட்டு வண்டியிலும், துவிச்சக்கர வண்டியிலும் பயணித்து கட்சிக்கு புதிய அங்கத்தவர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
Share:

மதுரங்குளியில் கட்சி அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வில் ரணில்! (படங்கள் இணைப்பு)

ஐ.தே.கட்சிக்கு நாடு முழுவதும் 20 இலட்சம் போ்களை சோ்த்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் முந்தல், மதுரங்குளி மற்றும் புத்தளம் பிரதேசங்களில் கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்க்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
Share:

புகையிரதம் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்டவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்துள்ள புகையிரதத்தில் பயணித்துள்ள பயணி ஒருவர் புகையிரம்  புகையிரத நிலையத்தில் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்ட வேளையில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நாத்தாண்டி புகையிரத நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Share:

உள்ளுர் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் இருவர் சிலாபம் பொலிசாரால் கைது!

தங்கொட்டுவ நகரில் நேற்று சனிக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போது கல்கடாஸ் வகை உள்ளுர் தயாரிப்பிலான  துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் மோட்டார் பைசிகளில் பயணித்த இருவரை கைது செய்துள்ளனர்.
Share:

Friday, May 17, 2013

யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!. கருவலகஸ்வெவவில் சம்பவம்!!

கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  புளியங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Share:

ஒரு வயது குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளய்ங்கார எனும் பிரதேசத்தில் தாய் வீட்டிலில்லாத சமயம் கைக்குழந்தையொன்று தீயில் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஒரு வயதும் 3 மாதங்களுமான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாதம் பொலிசார் தெரிவித்தனர்.
Share:

Thursday, May 16, 2013

சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 42 பேர் சிலாபத்தில் கைது.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு காத்திருந்தாகக் கூறப்டும் 42 பேரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர். சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த சமயம் இவர்கள் இன்று வியாழக்கிழமை   அதிகாலையில்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Share:

Wednesday, May 15, 2013

கல்பிட்டியில் கேரள கஞ்சா வைத்திருந்த மற்றொருவரும் கைது

கற்பிட்டி பிரதேசத்தில் கேரளா கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

மகளைக் கர்ப்பமாக்கிய தந்தை மதுரங்குளி முக்குத்தொடுவா பிரதேசத்தில் கைது!

தனது 13 வயது  மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி  கர்ப்பாமாக்கிய தந்தையை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்குத்தொடுவாவ எனும் பிரதேசத்தில் வைத்து முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Share:

புத்தளம் நகர புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

 புத்தளம் புதிய நகர நிர்மாணம், நகரிலுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுதல் மற்றும் நகர சபைக்கு சொந்தமான காணிகளை மீளப் பெறல் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை புத்தளம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
Share:

Tuesday, May 14, 2013

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக கூறப்படும்  4 பேரை முந்தல் பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.
Share:

மின்னல் தாக்குதலில் மாணவன் காயம். ஆனமடுவில் சம்பவம்

ஆனமடு பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவரொருவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share:

சிலாபம் நபருக்கு அபுதாபியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பணியாளர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக அபுதாபியில் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள சிலாபத்தைச் சேர்ந்த குறித்தநபர் ஒருவருக்கு  கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மன்னிப்பு வழங்காவிடின் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக வெளிநாட்டலுவல்கள்  பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்தார்.
Share:

Monday, May 13, 2013

தந்தையினால் கர்ப்பிணியான 13 வயது சிறுமி. முந்தல் பொலிஸ் பிரிவில் சம்பவம்!

13 வயது தனது மகளை தந்தையொருவர் கர்ப்பமாக்கிய சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் பிள்ளையின் தாயாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share:

பாலாவி வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

புத்தளம் பாலாவி நாகவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் நாகவில் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த எம்.ஐ.ரம்சீன் (வயது 32) என்பரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

Sunday, May 12, 2013

மாராவில விபத்தில் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு


மாராவில முகுதுகட்டுவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளானதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்தில் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
Share:

கல்பிட்டி தீவில் கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பிட்டியை அண்மித்த தீவு ஒன்றிலிருந்து கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை இரவு கல்பிட்டி கடற்படையினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share:

Thursday, May 9, 2013

புத்தளம் 5ம் வட்டார வடிகால்களை புனரமைப்புச் செய்வது தொடர்பான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

புத்தளம் 5 ம் வட்டாரத்தில் (மரிக்கார் கிராம சேவகர் பிரிவு) உள்ள கழிவு நீர் வடிகால்களை புதிதாக அமைப்பது, புனர்நிர்மாணம் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று புத்தளம் நகர சபை அலுவலகத்தில் இடம்பெற்றது. புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் மாவட்ட மீள் எழுச்சித் திட்டப் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Share:

Sunday, May 5, 2013

கல்பிட்டி பி.ச தலைவருக்கும் உறுப்பினர்களுக்குமிடையில் கட்சி மோதல்

கல்பிட்டி பிரதேச சபைத் தலைவருக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.

இதன் விளைவாக ஆளும் கட்சியினை சேர்ந்த 5 உறுப்பினர்கள் கல்பிட்டி பிரதேச சபையின் விசேட சபைக்கூட்டத்தினை கூட்டுமாறு கூட்டாக ஒப்பமிட்டு கடந்த வியாழக்கிழமை பிரதேசசபை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை கடந்த வியாழக்கிழமை மாதாந்த சபைக்கூட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Share:

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag