Comments

3/recent-comments
Showing posts with label உள்நாட்டுச் செய்திகள். Show all posts
Showing posts with label உள்நாட்டுச் செய்திகள். Show all posts

Thursday, May 6, 2021

கர்ப்பிணி தாய் ஒருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பு


தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி கோவிட் நியுமோனியா நிலையில் உயிரிழந்துள்ளார். ராகமை நாரங்கொடபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய் ராகமை வைத்தியசாலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று மாத கர்ப்பிணியான 45 வயதுடைய இத்தாய் சுகயீனமான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். இதன் போது அத்தாய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் மீண்டும் சுகயீனமுற்றதால் மீண்டும் ராகமை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது அத்தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது அத்தாய் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தாய் மினுவங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு அங்கு அவளது நிலை மோசமடைந்ததால் மீண்டும் ராகமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இத்தாய் ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

Share:

Thursday, May 16, 2013

யாழ் ஹோட்டலில் விபச்சார முற்றுகையிட்ட விவகாரம். பிரதேச செயலாளரைக் கைது செய்ய நடவடிக்கையாம்.

யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர்களுடன் சிறிது நேரம் உரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
Share:

தன் பாடசாலை மாணவச் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல்!

கெகிராவ, கல்கிரியாகம பாடசாலையொன்றின் அதிபர் ஒருவருக்கு வயது குறைந்த சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றம் மீதான விசாரணை நிமித்தம் எதிர்வரும் 22ம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share:

ஏழு வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு. மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளனர்.
Share:

கறுப்பு அபாயாவுடன் கண்டியில் நடமாடிய பெண் பொலிசாரால் கைது!

கறுப்பு அபாயா அணிந்து முகத்தை மூடிய வண்ணம் கண்டி நகருக்கு பஸ்ஸில் வந்திறங்கிய பெண்ணொருவர் நகர வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டமை யினால் கண்டி பொலிஸார் அப்பெண்ணைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தினர்.
Share:

போலிக்கச்சேரிகள் சுற்றிவளைப்பு. பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

கொழும்பு, கட்டுகஸ்தோட்ட, தித்தவெல பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த நான்கு போலிக் கச்சேரிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். போலி கச்சேரிகளை நடத்தி வந்த பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன் பல்வேறு விதமான போலி ஆவணங்களையும் சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட பொலிஸ் குழுவினர் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
Share:

Wednesday, May 15, 2013

பாடசாலை முடிந்து வீடு செல்ல காத்திருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக பாடசாலை வேனை எதிர்ப்பார்த்து பாடசாலை அருகில் விளையாடிகொண்டிருந்த 8 வயது சிறுவன் அருகிலிருந்த பாதுகாபற்ற கிணறொன்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
Share:

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து ஒபெக் நாடுகள் அரசிற்கு கடிதம்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விரும்பத்தகாத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் இலங்கை அரசுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்தது.
Share:

பஸ்ஸில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயணி கைது!

பஸ்ஸில் பணித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒருவர் மஹபாகே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Share:

Monday, May 13, 2013

பதிவுத்திருமணம் முடிந்த ஒன்றரை மணியின் பின் முன்னால் காதலனுடன் ஓடிய மாணவி!


காதலனுடன் பதிவு திருமணம் செய்துக்கொண்ட ஒன்றரை மணி நேரத்திற்குள் மணப்பெண்( காதலி) சாட்சியாளருடன் ஓடிப்போன சம்பவமொன்று கம்பளை மாவத்துற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடிவிட்டார்.

Share:

Thursday, May 9, 2013

17 வயது மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 60 வயது தாத்தா கைது

60 வயதான ஓய்வு பெற்ற கிராம சேவகர் (விதானை) ஒருவர் 17 வயது பாடசாலை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் கலபிந்துனுவௌ பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படும்  அந்த கிராமசேவகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Share:

Wednesday, May 1, 2013

உடப்பில் சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வு ( படங்கள் இணைப்பு)

புத்தளம் உடப்பு கிராமத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வின் போது இடம்பெற்ற சமய நிகழ்வுகளினைப் படங்களில் காணலாம். இந்நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 22ம் திகதி முளைப்பதித்தல் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 தினங்களாக இடம்பெற்று இன்றுடன் நிறைவடைந்தது.
Share:

தன் காதலர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடனும் தொடர்பு வைத்திருந்த செங்கலடி தனக்ஷனா!

செங்கலடி கொலையின் சூத்திரதாரசெங்கலடி மத்திய மகாவித்தியா லயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த 16வயதுடைய தலக்ஷனா என்ற இந்த மாண வியின் காதலன் அதேபாடசாலை யில் கல்வி கற்கும் 16வயதுடைய சிவநேசராசா அஜந் என்பது இந்த சம்பவம் பற்றிய செய்திகளின் பின் பலரும் அறிந்த விடயம். ஆனால் அவர் தலக்ஷனாவின் 6வது காதலன். 16வயதுடைய தலக்ஷனா இதுவரை 6பேரை காதலித்துள்ளார் .
Share:

Tuesday, April 30, 2013

கல்பிட்டி கடற்கரையோரத்தில் சடலம் மீட்பு.

கற்பிட்டி, முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற கற்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
Share:

பதில் கடமையினை எவருக்கும் வழங்காது வெளிநாடு சென்ற கல்பிட்டி பி.சபைத் தலைவர் தொடர்பில் முதலமைச்சரிடம் முறைப்பாடு

உரிய ஒழுங்கு விதிகளைப் பின்பற்றாமல் வெளிநாடு சென்று திரும்பிய கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் தொடர்பில் வடமேல் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் கடந்த புதன் கிழமை பதில் கடமையினை எவருக்கும் வழங்காது, சபைக்கும் தெரிவிக்காது வெளிநாடு சென்று கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
Share:

Monday, April 29, 2013

உயிருக்கு அச்சுறுத்தல்! அசாத் சாலி தலைமறைவு?

உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் தலைமறைவாகியுள்ளதாக முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேவையின் செய்திப் பிரிவொன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிடுள்ளது.
Share:

விபத்தில் பலியான பிரதேச சபைத் தலைவரின் இறுதி ஊர்வளம் (படங்கள் இணைப்பு)

கடந்த வியாழக்கிழமை சிலாபம் தெதுரு ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த புத்தளம் பிரதேச சபைத் தலைவர் திலுக் சுசிர பத்திரகேயின் இறுதிக்கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அதிக எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்த பிரதேச சபைத் தலைவரின் உடலுக்கு கடந்த சனிக்கிழமை தனது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக மதுரங்குளி வந்திருந்தார்.
Share:

காதலியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் தானும் தற்கொலை

தனது காதலியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் ஒருவர் தானும் அருகில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று குருநாகல் பன்னல கந்துலுபொத்த எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.  இன்று திங்கட்கிழமை காலை 8.05 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பன்னல பிரதேச சபையில் பட்டதாரி எழுதுவிளைஞராகக் கடமையாற்றும் 25 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார்.
Share:

Monday, April 22, 2013

விசாரணைக்காகச் சென்ற பொலிசார் மீது தாக்குதல். இருவர் கைது

விசாரணை ஒன்றிற்கானச் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share:

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag