Comments

3/recent-comments

Sunday, September 1, 2013

புத்தளத்தில் இன்று ஐ.ம.சு.முன்னணியின் இரண்டாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று புத்தளத்தில் இடம்பெறவுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் இக்கூட்டம் புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெறும்.
Share:

கடல் அலையில் சிக்சி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

இரண்டரை வயது குழந்தை ஒன்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர்.   மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருசுப்பள்ளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

14 வயது சிறுவன் மீது பாலியல் வல்லுறவு. சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை

புறா பிடித்துத் தருவதாகக் கூறி சிறுவன் ஒரவனை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வண்ணாத்திவில்லு பொலிசார் தெரிவித்தனர்.  வண்ணாத்திவில்லு 16ம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவனாகும்.
Share:

12 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய 62 வயது தாத்தா கைது

இரண்டு வருடங்களாக பாடசாலை மாணவியான சிறுமி ஒருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகச் சொல்லப்படும் 62 வயது நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிசார் தெரிவித்தனர்.  12 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியாவார். 
Share:

தேர்தல் சட்டத்தை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டவர் முந்தல் பொலிசாரால் கைது

சட்டவிரோதான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒருவர் முந்தல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இதற்குப் பயன்படுத்திய வானும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் சட்டதிட்டங்களுக்கு அமைய குறித்த வேட்பாளரின்றி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்த்தை மீறியதற்காகவே இக்கைது இடம்பெற்றுள்ளது.
Share:

Friday, May 24, 2013

Ven Purave... Tamil Peace Song

Share:

Wednesday, May 22, 2013

TV நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சியில் கலந்கொண்ட தாய் ஒருவரின் மார்பில் பால் குடித்த நிகழ்ச்சி தொகுப்பாளர்!

நெதர்லாந்தின் டச்சு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் சனிக்கிழமை இரவு நடாத்திய ரி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தாய் ஒருவரின் மார்பில் இருந்து பாலை உறிஞ்சியதைப் பார்த்து பார்வையாளர்கள் திகைப்படைந்தனர்.
Share:

Tuesday, May 21, 2013

காலான் உண்ட பின் நிர்வாணமாக வீதியில் வலம் வந்த மாணவி பொலிசாரால் மடக்கி பிடிப்பு!

காலான் உண்டதால் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம் கிளம்பிய மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் Colorado மாகாணத்தின் University of Colorado பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், திடீரென பல்கலைக்கழக வகுப்பில் வைத்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார்.
Share:

சவூதி - குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை வழங்கி அவர்களின் உடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

சவூதி அரேபியாவில் இன்று யேமன் நாட்டுக் குற்றவாளிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டு, உடல்கள் பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும், ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share:

இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பமானதையடுத்து பரபரப்பு!

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share:

Sunday, May 19, 2013

ஐ.தே.கட்சி எம்.பி ஹரிசன் ஆனமடுவில் மாட்டு வண்டியில் சென்று அங்கத்தவர்கள் சேர்ப்பு. (படங்கள் இணைப்பு)


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆனமடு பிரதேசத்தில் மாட்டு வண்டியிலும், துவிச்சக்கர வண்டியிலும் பயணித்து கட்சிக்கு புதிய அங்கத்தவர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
Share:

மதுரங்குளியில் கட்சி அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வில் ரணில்! (படங்கள் இணைப்பு)

ஐ.தே.கட்சிக்கு நாடு முழுவதும் 20 இலட்சம் போ்களை சோ்த்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் முந்தல், மதுரங்குளி மற்றும் புத்தளம் பிரதேசங்களில் கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்க்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
Share:

புகையிரதம் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்டவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்துள்ள புகையிரதத்தில் பயணித்துள்ள பயணி ஒருவர் புகையிரம்  புகையிரத நிலையத்தில் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்ட வேளையில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நாத்தாண்டி புகையிரத நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Share:

உள்ளுர் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் இருவர் சிலாபம் பொலிசாரால் கைது!

தங்கொட்டுவ நகரில் நேற்று சனிக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போது கல்கடாஸ் வகை உள்ளுர் தயாரிப்பிலான  துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் மோட்டார் பைசிகளில் பயணித்த இருவரை கைது செய்துள்ளனர்.
Share:

Friday, May 17, 2013

யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!. கருவலகஸ்வெவவில் சம்பவம்!!

கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  புளியங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Share:

ஒரு வயது குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளய்ங்கார எனும் பிரதேசத்தில் தாய் வீட்டிலில்லாத சமயம் கைக்குழந்தையொன்று தீயில் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஒரு வயதும் 3 மாதங்களுமான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாதம் பொலிசார் தெரிவித்தனர்.
Share:

Thursday, May 16, 2013

யாழ் ஹோட்டலில் விபச்சார முற்றுகையிட்ட விவகாரம். பிரதேச செயலாளரைக் கைது செய்ய நடவடிக்கையாம்.

யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர்களுடன் சிறிது நேரம் உரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
Share:

தன் பாடசாலை மாணவச் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல்!

கெகிராவ, கல்கிரியாகம பாடசாலையொன்றின் அதிபர் ஒருவருக்கு வயது குறைந்த சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றம் மீதான விசாரணை நிமித்தம் எதிர்வரும் 22ம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share:

ஒரே மேடையில் இரு பெண்களை மணந்த சவூதியர். மக்காவில் சம்பவம்

ஒரே மேடையில் இரு பெண்களை மணந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த சவதி பிரஜையொருவரின் விருந்தோம்பல் சவுதி ஊடகங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Share:

ஏழு வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு. மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளனர்.
Share:

கறுப்பு அபாயாவுடன் கண்டியில் நடமாடிய பெண் பொலிசாரால் கைது!

கறுப்பு அபாயா அணிந்து முகத்தை மூடிய வண்ணம் கண்டி நகருக்கு பஸ்ஸில் வந்திறங்கிய பெண்ணொருவர் நகர வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டமை யினால் கண்டி பொலிஸார் அப்பெண்ணைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தினர்.
Share:

போலிக்கச்சேரிகள் சுற்றிவளைப்பு. பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

கொழும்பு, கட்டுகஸ்தோட்ட, தித்தவெல பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த நான்கு போலிக் கச்சேரிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். போலி கச்சேரிகளை நடத்தி வந்த பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன் பல்வேறு விதமான போலி ஆவணங்களையும் சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட பொலிஸ் குழுவினர் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
Share:

அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய இலங்கை இளைஞரின் வீசா இரத்து

அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவரின் வீசா அனுமதியினை இரத்துச் செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டி.செல்வராஜா (வயது 21) என்ற இளைஞருக்கே இவ்வாறு வீசா இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Share:

சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 42 பேர் சிலாபத்தில் கைது.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு காத்திருந்தாகக் கூறப்டும் 42 பேரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர். சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த சமயம் இவர்கள் இன்று வியாழக்கிழமை   அதிகாலையில்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Share:

Wednesday, May 15, 2013

கல்பிட்டியில் கேரள கஞ்சா வைத்திருந்த மற்றொருவரும் கைது

கற்பிட்டி பிரதேசத்தில் கேரளா கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

பாடசாலை முடிந்து வீடு செல்ல காத்திருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக பாடசாலை வேனை எதிர்ப்பார்த்து பாடசாலை அருகில் விளையாடிகொண்டிருந்த 8 வயது சிறுவன் அருகிலிருந்த பாதுகாபற்ற கிணறொன்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
Share:

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து ஒபெக் நாடுகள் அரசிற்கு கடிதம்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விரும்பத்தகாத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் இலங்கை அரசுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்தது.
Share:

மகளைக் கர்ப்பமாக்கிய தந்தை மதுரங்குளி முக்குத்தொடுவா பிரதேசத்தில் கைது!

தனது 13 வயது  மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி  கர்ப்பாமாக்கிய தந்தையை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்குத்தொடுவாவ எனும் பிரதேசத்தில் வைத்து முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Share:

புத்தளம் நகர புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

 புத்தளம் புதிய நகர நிர்மாணம், நகரிலுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுதல் மற்றும் நகர சபைக்கு சொந்தமான காணிகளை மீளப் பெறல் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை புத்தளம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
Share:

பஸ்ஸில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயணி கைது!

பஸ்ஸில் பணித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒருவர் மஹபாகே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Share:

விமானத்தில் கூக்குரலில் பாடிய பெண்ணால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் கூக்குரலில் பாடி பயணிகளை தொந்தரவு செய்த பெண்ணால் இடைநடுவில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயோர்க் நகரை நோக்கி கடந்த 9ஆம் திகதி பயணித்த அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Share:

இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்த உயிரிழந்தவர் எழுந்து வந்த ஆச்சரியம்

சிம்பாப்வேயில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது இறந்ததாக நம்பப்பட்ட நபரொருவர் சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த அதிர்ச்சிச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. 34 வயதான பிரைட்டன் டமா சந்தே என்பவரே இவ்வாறு இறுதிச் சடங்கிலிருந்து எழுந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Share:

Tuesday, May 14, 2013

தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு காப்புறுதி நஷ்டயீடு பெற முயன்றவர் கைது

டொரண்டோவில் உள்ள ஒரு நபர், தன்னுடைய காலில் தானே காயப்படுத்திக்கொண்டு, வாகன விபத்தினால் காயம் ஏற்பட்டது என இன்சூரன்ஸ் தொகை பெற முயன்றதாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Share:

IPL போட்டியினால் 30 இலட்சத்தை இழந்த மாணவன்! பணத்தை மீட்க சிறுவனைக் கடத்தி கொலை!

உலகின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது .இந்த விளையாட் டிற்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த எம்பிஏ படிக்கும் ஹிமான்ஷு ரங்கா என்ற மாணவன் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ. 30 லட்சத்தை இழந்துள்ளார்.
Share:

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக கூறப்படும்  4 பேரை முந்தல் பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.
Share:

மின்னல் தாக்குதலில் மாணவன் காயம். ஆனமடுவில் சம்பவம்

ஆனமடு பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவரொருவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share:

சிலாபம் நபருக்கு அபுதாபியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பணியாளர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக அபுதாபியில் மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள சிலாபத்தைச் சேர்ந்த குறித்தநபர் ஒருவருக்கு  கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மன்னிப்பு வழங்காவிடின் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக வெளிநாட்டலுவல்கள்  பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்தார்.
Share:

Monday, May 13, 2013

பதிவுத்திருமணம் முடிந்த ஒன்றரை மணியின் பின் முன்னால் காதலனுடன் ஓடிய மாணவி!


காதலனுடன் பதிவு திருமணம் செய்துக்கொண்ட ஒன்றரை மணி நேரத்திற்குள் மணப்பெண்( காதலி) சாட்சியாளருடன் ஓடிப்போன சம்பவமொன்று கம்பளை மாவத்துற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடிவிட்டார்.

Share:

தந்தையினால் கர்ப்பிணியான 13 வயது சிறுமி. முந்தல் பொலிஸ் பிரிவில் சம்பவம்!

13 வயது தனது மகளை தந்தையொருவர் கர்ப்பமாக்கிய சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் பிள்ளையின் தாயாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share:

மூன்று வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கி வாழும் இளைஞன்

தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட். இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார்.
Share:

பாலாவி வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

புத்தளம் பாலாவி நாகவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் நாகவில் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த எம்.ஐ.ரம்சீன் (வயது 32) என்பரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

Sunday, May 12, 2013

மாராவில விபத்தில் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு


மாராவில முகுதுகட்டுவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளானதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்தில் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
Share:

கல்பிட்டி தீவில் கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பிட்டியை அண்மித்த தீவு ஒன்றிலிருந்து கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருள் பக்கட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை இரவு கல்பிட்டி கடற்படையினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share:

Thursday, May 9, 2013

புத்தளம் 5ம் வட்டார வடிகால்களை புனரமைப்புச் செய்வது தொடர்பான கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)

புத்தளம் 5 ம் வட்டாரத்தில் (மரிக்கார் கிராம சேவகர் பிரிவு) உள்ள கழிவு நீர் வடிகால்களை புதிதாக அமைப்பது, புனர்நிர்மாணம் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று புத்தளம் நகர சபை அலுவலகத்தில் இடம்பெற்றது. புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் மாவட்ட மீள் எழுச்சித் திட்டப் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Share:

17 வயது மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 60 வயது தாத்தா கைது

60 வயதான ஓய்வு பெற்ற கிராம சேவகர் (விதானை) ஒருவர் 17 வயது பாடசாலை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் கலபிந்துனுவௌ பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படும்  அந்த கிராமசேவகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Share:

Sunday, May 5, 2013

கல்பிட்டி பி.ச தலைவருக்கும் உறுப்பினர்களுக்குமிடையில் கட்சி மோதல்

கல்பிட்டி பிரதேச சபைத் தலைவருக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.

இதன் விளைவாக ஆளும் கட்சியினை சேர்ந்த 5 உறுப்பினர்கள் கல்பிட்டி பிரதேச சபையின் விசேட சபைக்கூட்டத்தினை கூட்டுமாறு கூட்டாக ஒப்பமிட்டு கடந்த வியாழக்கிழமை பிரதேசசபை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை கடந்த வியாழக்கிழமை மாதாந்த சபைக்கூட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Share:

Wednesday, May 1, 2013

உடப்பில் சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வு ( படங்கள் இணைப்பு)

புத்தளம் உடப்பு கிராமத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வின் போது இடம்பெற்ற சமய நிகழ்வுகளினைப் படங்களில் காணலாம். இந்நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 22ம் திகதி முளைப்பதித்தல் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 தினங்களாக இடம்பெற்று இன்றுடன் நிறைவடைந்தது.
Share:

தன் காதலர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடனும் தொடர்பு வைத்திருந்த செங்கலடி தனக்ஷனா!

செங்கலடி கொலையின் சூத்திரதாரசெங்கலடி மத்திய மகாவித்தியா லயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த 16வயதுடைய தலக்ஷனா என்ற இந்த மாண வியின் காதலன் அதேபாடசாலை யில் கல்வி கற்கும் 16வயதுடைய சிவநேசராசா அஜந் என்பது இந்த சம்பவம் பற்றிய செய்திகளின் பின் பலரும் அறிந்த விடயம். ஆனால் அவர் தலக்ஷனாவின் 6வது காதலன். 16வயதுடைய தலக்ஷனா இதுவரை 6பேரை காதலித்துள்ளார் .
Share:

Tuesday, April 30, 2013

கல்பிட்டி கடற்கரையோரத்தில் சடலம் மீட்பு.

கற்பிட்டி, முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற கற்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
Share:

பதில் கடமையினை எவருக்கும் வழங்காது வெளிநாடு சென்ற கல்பிட்டி பி.சபைத் தலைவர் தொடர்பில் முதலமைச்சரிடம் முறைப்பாடு

உரிய ஒழுங்கு விதிகளைப் பின்பற்றாமல் வெளிநாடு சென்று திரும்பிய கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் தொடர்பில் வடமேல் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் கடந்த புதன் கிழமை பதில் கடமையினை எவருக்கும் வழங்காது, சபைக்கும் தெரிவிக்காது வெளிநாடு சென்று கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
Share:

Monday, April 29, 2013

உயிருக்கு அச்சுறுத்தல்! அசாத் சாலி தலைமறைவு?

உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் தலைமறைவாகியுள்ளதாக முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேவையின் செய்திப் பிரிவொன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிடுள்ளது.
Share:

விபத்தில் பலியான பிரதேச சபைத் தலைவரின் இறுதி ஊர்வளம் (படங்கள் இணைப்பு)

கடந்த வியாழக்கிழமை சிலாபம் தெதுரு ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த புத்தளம் பிரதேச சபைத் தலைவர் திலுக் சுசிர பத்திரகேயின் இறுதிக்கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அதிக எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்த பிரதேச சபைத் தலைவரின் உடலுக்கு கடந்த சனிக்கிழமை தனது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக மதுரங்குளி வந்திருந்தார்.
Share:

காதலியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் தானும் தற்கொலை

தனது காதலியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் ஒருவர் தானும் அருகில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று குருநாகல் பன்னல கந்துலுபொத்த எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.  இன்று திங்கட்கிழமை காலை 8.05 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பன்னல பிரதேச சபையில் பட்டதாரி எழுதுவிளைஞராகக் கடமையாற்றும் 25 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார்.
Share:

Monday, April 22, 2013

விசாரணைக்காகச் சென்ற பொலிசார் மீது தாக்குதல். இருவர் கைது

விசாரணை ஒன்றிற்கானச் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share:

14 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட இளைஞன் கைது

14 வயது சிறுமி ஒருத்தியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் 19 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிசார் தெரிவித்தனர்.  மாதம்பை ஜயபிம எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
Share:

Friday, April 19, 2013

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல் நலம் தொடர்பில் சந்தேகம் - ஹிருனிகா

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உண்மையான உடல் நலன் தொடர்பில் தனக்கு மிகுந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக படுகொலை செய்யப்பட்ட லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரின் நடவடிக்கைகள் தொடர்பிலேயே தனக்கு சந்தேகம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொலன்னாவ கொட்டிகாவத்தை பிரதேசத்தின் பிரதேச அரசியல்வாதிகள் பலரை நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்து அவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியிருப்பதாக செய்தி தாள்களில் செய்திகள் வந்திருக்கும் போது அவரது மனநிலையில் இன்னும் நல்ல நிலை ஏற்படவில்லை என அவரது சட்ட ஆலோசகர்கள் தொடர்ச்சியாக கூறி வருவதானது பிரச்சினைக்குரியதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share:

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் நகை திருட்டு. குற்றவாளிக்கு தொடர்ந்து விளக்கமறியல்

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி கோவிலில் காளியம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த சுமார் இரண்டறை இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய  நபரை இம்மாதம் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் பதில் நீதிவான் என். ரூபசிங்க உத்தரவிட்டுள்ளார்.
Share:

நாத்தாண்டியைச் செர்ந்த இளைஞர் ரியாத் சிறையில் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் கடவுசடசீட்டின்றி கைது செய்யப்பட்டு ரியாத் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புத்தளம் நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளார்.  ரியாத் இமாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
Share:

Thursday, April 18, 2013

மின்கட்டண அதிகரிப்பானது மக்களுக்கான அரசின் புத்தாண்டு பரிசாகும்

அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு இம்முறை புதுவருடப் பரிசாக பெறுமதியான பரிசொன்றை வழங்கியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். பாரியளவில் மின் கட்டணங்களை அதிகரிப்பே அந்த பெறுமதியான பரிசெனவும், இவ்வாறு பாரியளவில் மின் கட்டணங்களை அதிகரித்திருப்பதானது ஏனைய துறைகளில் இடம்பெறும் மோசடிகளினால்
Share:

Tuesday, April 16, 2013

மின்சார ட்ரான்ஸ்போமரில் தூக்கிட்டுக் கொண்டு ஒருவர் தற்கொலை

தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றின் காரணமாக நபரொருவர் மின்சார ட்ரான்ஸ்போமரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். துன்கண்ணாவ மானிங்கள எனும் பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளிவ். ரஞ்சித் ரெக்சி (வயது 46) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவராவார்.
Share:

சிலாபத்தில் இனிமேல் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்கள் இல்லை

சிலாபம் பிரதேச சபை எல்லைக்குள் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புக்களை (டியுசன்) நடாத்துவதற்கு தடைவிதிப்பதெற்கான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக சிலாபம் பிரதேச சபையின் தலைவர் ஜீவன் ஜூட் தெரிவித்தார்.  கடந்த பிரதேச சபையின் கூட்டத்தின் போது பிரதேச சபை உறுப்பினர் சுரங்க த சொய்சா (ஆளுங்கட்சி) வினால் கொண்டுவரப்பட்ட
Share:

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மாஹோ இத்தபொல எனும் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு தனது சேனைப் பயிர்ச்செய்கையின் பாதுகாப்புக்காகச் சென்றிருந்த சமயமே இவ்வாறு அவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு
Share:

மாதம்யை இந்திய இரும்பு தொழிற்சாலையில் பணிபகிஷ்கரிப்பு தொடர்கிறது

பழைய இரும்புகளை உருக்கி மீண்டும் இரும்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய நாட்டவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் உடன்பாடுகள் எதுவுமின்றி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. மாதம்பை சுதுவெல்ல எனும் பிரதேசத்திலேயே இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.
Share:

ஆஸாத் சாலியின் தாயார் வபாத்தானார்

சிரேஷ்ட அமைச்சர் பௌஸியின் சகோதரியும் (தங்கை) கொழும்பு மாநாக சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலியின் தாயாருமான ஹைரூன் சானூன் சாலி  இன்று செவ்வாய்கிழமை தனது 71வது வயதில்  வபாத்தானார்.

நோய் வாய்பட்டிருந்த அன்னார் கொழும்பு  தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று வபாத்தானார். இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை புதன்கிழமை குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

கண்டி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் புத்தளம் பூங்காவுக்கு விஜயம். (படங்கள் இணைப்பு)

கண்டி பிரதேச சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுற்றுலாவை மேற்கொண்டு புத்தளம் வந்த போது புத்தளம் நகர சபையின் சிறுவர் பூங்கா மற்றும் நூல் நிலையம் என்பவற்றைப் பார்வையிட்டனர். புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடியதோடு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.



Share:

சகோதரிகள் இருவர் மீது பாலியல் வல்லுறவு. இரு சந்தேக நபர்கள் கைது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் மாஹோ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாஹோ தெதுரு ஓயா திட்ட வான் பகுதியில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

16 மற்றும் 20 வயதுகளையுடைய குறித்த இரு சகோதரிகளும் முதலில் அவர்களின் காதலர்களினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு வந்துள்ள மேலும் நால்வர் அவ்யுவதிகளை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இரு யுவதிகளும் வைத்திய சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாஹோ பொலிசார் தெரிவித்தனர்.
Share:

Monday, April 15, 2013

ஐந்து பிள்ளைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாய் கொடை.

ஐந்து அல்லது அதற்கு மேல் பிள்ளைகளைக் கொண்ட சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் கொடை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் வரும் வெசாக் வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தாய்நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு (மவ்பிம சுரக்கீமே சங்விதானய) தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின் முதற் கட்ட கொடை வழங்கும் பணி அவ்வாரம் ஆரம்பிக்கப்படும். இதற்காக ஐந்து அல்லது அதற்கு மேல் குழந்தைகளைக் கொண்ட 25 குடும்பங்கள் முதலில் தெரிவு செய்யப்பட்டு பணக் கொடுப்பனவு வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த இனத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தில் மவ்பிம சுரக்கீமே அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட நிதியத்திற்கு இதுவரை உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிகமானோர் நிதி உதவி செய்துள்ளனர். தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். வரும் காலங்களிலும் செய்வதற்குக் காத்திருக்கின்றனர் என ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு மாதாந்தம் தொடர்ந்து 25 ஆயிரம் ரூபாய் கொடை வழங்கப்படும் எனவும் ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.
Share:

குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தனது வெளியூர் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை புத்தளம், பாவட்டமடு குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர்  அப்துல் ஹமீத் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் இவ்வாறு தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் காணாமல் போனவரைத்  தேடிய போது குறித்த நபர் நீரின் அடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம்  தொடர்பில் புத்தளம் பொலிசார் மேலதிக விசாரனணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

நீர் நிரம்பிய குழியினுள் வீழ்ந்து நான்கு வயது சிறுமி உயிரிழப்பு

நாத்தாண்டிய, இஹல கொட்டராமுல்லை பிரதேசத்தில் நீர் நிரம்பிய குழி ஒன்றினுள் வீழ்ந்து நான்கு வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  புதுவருட தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது பெற்றோருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கு சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது வாகனங்கள் சர்வீஸ் பண்ணப்படும் நிலையம் ஒன்றின் கழிவுகளை அகற்றும் குழி ஒன்றினுள் தவறுதலாக வீழ்ந்துள்ள போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேர பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாராவில பொலிசார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

Saturday, April 13, 2013

கஞ்சா மற்றும் கைக்குண்டுடன் சிலாபத்தில் ஒருவர் கைது

கைக்குண்டு ஒன்றுடன் கஞ்சா ஒரு கிலோவை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை சிலாபம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். சிலாபம் சேதவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்ய்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டு வெளிநாட்டு தாயரிப்பு என்றும் எனினும் அக்குண்டானது எவ்வகையினைச் சார்ந்தது என கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் வெளியிடங்களில் இருந்து கஞ்சாவைக் கொண்டு வந்து சிலாபம் மற்றும் அண்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களில் விற்பனை செய்து வந்திருப்பதாகவும், கைக்குண்டு ஒன்றினை எதற்காக சந்தேக நபர் தம்வசம் வைத்திருந்தார் என்ற விடயம் தெரியவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிலாபம் பொலிசார் சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Share:

புத்தளம் ஒன்லைன் இணையத்தின் இரு வருடப் பூர்த்தி வைபவம்


புத்தளம் ஒன்லைன் இணையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று புத்தளம் கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளத்தில் ஊடகத்துறைக்குப் பங்களிப்புச் செய்த நான்கு சிரேஷ்ட ஊடகவியலளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் புத்தளத்தில் இயங்கும் ஊடகத்துறை சார்ந்த மூன்று சங்கங்களும் கௌரவிக்கப்பட்டன. இன்றைய நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் விஷேட உரையாற்றினார்.

புத்தளம் ஒன்லைன் இரண்டாம் வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட வினாவிட மற்றும் புகைப்படப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் இன்றைய நிகழ்வின் போது பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share:

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag