Comments

3/recent-comments

Sunday, September 1, 2013

12 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய 62 வயது தாத்தா கைது

இரண்டு வருடங்களாக பாடசாலை மாணவியான சிறுமி ஒருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகச் சொல்லப்படும் 62 வயது நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிசார் தெரிவித்தனர்.  12 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியாவார். 


இச்சிறுமி வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள வாடகை வீடொன்னறில் தமது பெற்றோர் மற்றும் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த வீடு கைது செய்யப்பட்ட சந்தேக நபரினுடையது என பொலிசார் தெரிவித்தனர். கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம் நேற்று முன்தினம் வரை சந்தேக நபரினால் குறித்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ள விடயம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலினையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag