புறா பிடித்துத் தருவதாகக் கூறி சிறுவன் ஒரவனை அழைத்துச் சென்று பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது
செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வண்ணாத்திவில்லு பொலிசார்
தெரிவித்தனர். வண்ணாத்திவில்லு 16ம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது
சிறுவன் ஒருவனே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவனாகும்.
சம்பவ தினம் தனது வீட்டுக்கு அண்மையில் அமைந்திருக்கும் தேவாலயம் ஒன்றின் மைதானத்தில் விளையாடச் சென்றுள்ளார். இச்சிறுவன் வழமையாக இந்த தேவாலய மைதானத்தில் விளையாடச் செல்வது வழக்கம் என தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு அங்கு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போபது அங்கு வந்துள்ள சந்தேக நபர் சிறுவனிடம் புறா பிடித்துத் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின் பின்னர் தமது பிள்ளை மீது மேற்கொள்ளப்பட்ட இந்த குற்றச் செயல் குறித்து சிறுவனின் பெற்றோர் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்தே பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இதுவரைக் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கும் வண்ணாத்திவில்லு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment