Comments

3/recent-comments

Monday, April 22, 2013

விசாரணைக்காகச் சென்ற பொலிசார் மீது தாக்குதல். இருவர் கைது

விசாரணை ஒன்றிற்கானச் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ தினம் இரவு ஆணைவிழுந்தான் பகுதியில் பிரச்சினை ஒன்று இடம்பெறுவதாக ஆராச்சக்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் காவலரனுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஆனைவிழுந்தான்  பகுதிக்கு விசாரணைக்காகச் சென்ற குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அதிக மதுபோதையில் அங்கிருந்த மூவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இரு பொலிசாரும் உடனடியாக அங்கிருந்தவர்களினால் சிலாபம் வைத்தியசாலக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சிலாபம் பொலிசார் இன்று சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள சிலாபம் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

0 Comments:

Post a Comment

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag